போரைத் தொடர்ந்து வன்னியிலிருந்த விடுதலைப் புலிகள் தற்கொலைக் குண்டுதாரிகளில் பலரும் கொழும்பை நோக்கி வந்துவிட்டதாகவும், ஆனால் அவர்கள் இப்போது எங்கே உள்ளார்கள் என்பதுபற்றித் தெரியவரவில்லை என்றும் புலனாய்வு அறிக்கைகள் கூறுவதாக இலங்கைப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

டெய்லி மிரர் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு கூறியுள்ள அவர், மேற்படி குண்டுதாரிகளைக் கண்டுபிடிப்பதில் படை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும், எனவே அதுவரை படையினர் உஷார் நிலையில் இருப்பார்கள் என்றும் கூறினார்.
மேலும், தற்கொலைதாரிகள் என்பவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள், அவர்கள் எங்கே என்பதை நாங்கள் இப்போது கண்டுபிடிக்காவிட்டால், அனைத்து இடங்களிலும் அவர்கள் ஊடுருவிவிட்டார்கள் என்று கருத்தாகும்.
அவர்கள் தம்முடன் கொண்டுவந்த் ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள் என்றால் எந்நேரத்திலும் எங்கு வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதாலேயே ராணுவத்தினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.
விடுதலைப்புலிகள் மீண்டும் எழுவார்களா என்பது குறித்துக் கேட்டபோது, தமக்குக் கிடைத்துள்ள புலனாய்வுத் தகவல்களின்படி, வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் இப்போதும் நிதிதிரட்டலில் ஈடுபட்டுள்ளார்கள், ஆனால் இந்த நிதிதிரட்டலுக்கான காரணம் இன்னமும் தெரியவரவில்லை.
இதேவேளை வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் அனைவரும் நிதிதிரட்டலுக்காக ஒன்று கூடுகிறார்கள். இவர்கள் தாமாகவே ஒரு அமைப்பாக இயங்கவுள்ளார்களா என்பது தமக்குத் தெரியவில்லை என்றுள்ளார் ரட்ணசிறி விக்கிரமநாயக்க. தமது புலனாய்வுத் துறையினர் கொடுத்த தகவலின்படி, வவுனியா இடம்பெயர் முகாம்களில் இப்போதும் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்ளார்கள். எனவேதான் மீள்குடியேற்றம் தாமதப்படுகின்றதாம்.
பிரதமர் ரட்ணசிறி கூறியது போன்றே ராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியாவும், "தனித் தமிழீழம் என்ற கொள்கை இன்னமும் வெளிநாட்டிலுள்ள தமிழர்கள் மத்தியில் உறுதியாக உள்ளது" என அண்மையில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தேங்க்ஸ் to www.manithan.net
Download As PDF
No comments:
Post a Comment