Ads

exclusivemails.net

Wednesday, February 24, 2010

நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துகின்றோமா?


விடாது ஓடும் கடிகார முட்கள் 1, 2, 3 என்று தினம் தினம் காலையில் கிழிக்கப்படும் தினசரி கலண்டர் தாள்கள்....

மார்ச், ஏப்ரல், மே என்று சுருட்டப்படும் மாதக் காலண்டர்கள்...

காற்றில் கரையும் கற்பூரமாய் நேரம் தானாகக் கரைந்து நம் கண் முன்பாகவே காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.http://blogs.discovermagazine.com/cosmicvariance/files/2008/11/time-flies-clock-10-11-2006.gif

2007, 2008, 2009 என்று அடுத்தது, அடுத்தது என்று எத்தனை புத்தாண்டுகள் நம்மை விட்டு உருண்டோடிக் கொண்டிருக்கின்றன. வாழ்க்கையில் வருடங்கள் கூட்டுவது முக்கியமல்ல. வருடங்களுக்கு உயிர் கொடுப்பது தானே முக்கியம்....கொஞ்சம் திருப்பிப் பார்க்கையில் ஆச்சரியமாய் இருக்கின்றது. கூடவே அச்சமாகவும் இருக்கின்றது. நேரம் செலுத்தப்பட்ட அம்பைப் போன்றது. அது திரும்ப வராது என்பார்கள். உண்மைதான். நேரம் பணத்தைவிட உயர்ந்தது. ஆம் அந்தப் பணத்தையே நேரம் தானே சம்பாதித்தும் தருகிறது.

‘இன்னும் ஒரு நிமிடம் தாமதமாயிருந்தால் இந்தக் குழந்தையை காப்பாற்றி இருக்க முடியாது’ டாக்டர் சொல்வார். உயிரைப்போல அந்த ஒரு நிமிடம் அவ்வளவு அருமையானது.

ஒரு மணிக்கு 60 நிமிடங்கள், ஒரு நாளைக்கு 24 மணி நேரம் இது உலகத்தில் உள்ள அனைவருக்கும் பொதுவானது. அதை எப்படி பயன்படுத்துகி றோம் என்பதில்தான் வெற்றியின் ரகசியம் மறைந்திருக்கிறது.

நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவது என்பது அட்டவணையால் சாத்தியமில்லை. எப்போது நாம் உள்ளுணர்வுடன் செயல்களைச் செய்கிறோமோ, அப்போது தேவையற்ற செயல்கள் நம்மிடமிருந்து தானாக உதிர்ந்து விடுகின்றன. உள்ளுணர்வுடன் செயல்படுவோமானால் ஒரு மணி நேரத்தில் செய்கிற செயல் அரை மணி நேரத்தில் முடிந்துவிடும்.

ஒரு மனிதனின் ஆயுளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் கழிந்துவிடுகிறது. பத்தில் ஒரு பங்கு உண்பதிலும், மற்றொரு பங்கு பாத்ரூமிலும் கழிந்துவிடுகிறது. இன்னொரு பங்கு நேரம் உறவினர் மற்றும் நண்பர்களிடம் அரட்டை அடிப்பதிலும் பொழுது போக்குவதிலும் புஸ்வாணமாகிறது.

ப்படி எழுபது சதவீதம் கைவிட்டுப்போக மிச்சமிருப்பது முப்பது சதவீதம். இதில்தான் வேலை பார்த்ததாக வேண்டும். கனவுகளை நனவாக்க வேண்டும். அதைத்தாண்டி புதிய சாதனை களை நிகழ்த்தியாக வேண்டும். இதை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு இலக்கைத் தீர்மானித்து செயல்படுத்தும் போது எந்தச் செய லும் வெற்றியில்தான் முடியும்.

வாழ்க்கையில் வெற்றிபெற எல்லா வசதிகளும் இருந்தும் பலர் வெற்றி பெற முடியாமல் போவதற்கு காரணம் ஒன்றே ஒன்றுதான். “காலத்தே செய்” என்று கேள்விப்பட்டிருக்கிறோமே அதுதான்.

காலத்தில் மதிப்புமிக்கது இளமைக்காலம். பல இளைஞர்களின் காலமோ கண்போன போக்கில் கால்கள் போய்க் கொண்டிருக்கின்றன. காமக்களியாட்டங்களில் ஈடுப ட்டுக் காலத்தைக் காலமாக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

‘அன்பான இளைஞனே, இப்படி இருக்கலாமா?’ என்று கேட்டால்....

‘நீங்கள்தானே சொன்னீர்கள் காலத்தே செய்’ என்று. இப்போது எங்களின் காலம். இப்போது செய்யாமல் வயதான பிறகா செய்ய முடியும் என்று தத்துவார்த்தமாய் பதில் சொல்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான அர்த்தத்தை சாதுரியமாக எடுத்துக் கொள்கிறார்கள்.

‘காலத்தே செய்’ என்பதற்கு அது அர்த்தமல்ல. எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டுமோ. அதாவது காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பார்களே அதுதான் பொருள்.

இழந்த பணத்தை இரட்டிப்பாகச் சம்பாதிக்கலாம். ஆனால் இழந்த காலத்தை ஒருபோதும் திரும்பச் சம்பாதிக்க முடியாது. அதிலும் இளமைக் காலம் மதிப்பிலும் மதிப்புமிக்கது.

இந்தக் காலத்தை சிலர் வெட்டுக் கிளியாக வெட்டிக் கொண்டிருக் கின்றார்கள். சிலர் மட்டுமே தேனீயாக இருந்து தேனாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இது என்ன வெட்டுக்கிளி.... தேனீ.... புதிராக இருக்கிறது என்கிaர்களா?.... இதோ ஒரு நிகழ்வு.

பூச்செடிகள் நிறைந்திருக்கின்ற பூச்சோலை. பூத்திருக்கிற பூக்களில் தேன் எடுப்பதற்காகப் பறந்து வந்தது ஒரு தேனீ. அங்கே ஏற்கனவே ஒரு வெட்டுக்கிளி அந்தச் செடியின் இலைகளை கத்தரித்து விழுங்கிக் கொண்டிருந்தது.

அப்போது அந்த வெட்டுக்கிளி தேனீயிடம் சொன்னது, ‘இந்தச் செடியால் நாம் இருவரும் பயன்பெறுகிறோம். இவை இல்லாமல் இருந்தால் நாமிருவருமே செத்துப் போய்விடுவோம்’ என்றது.

தேனீ அதற்குப் பதில் சென்னது, ‘உண்மைதான். ஆனால் நீ இந்தச் செடியை சுரண்டுகிறாய். நானோ இந்தச் செடியை மகரந்தச் சேர்கையால் செழிக்கச் செய்கிறேன். இது பூத்துக்காய்த்து வளம் கொழிக்க எனது இறகு என்னும் சிறகுகளால் விசிறி வீசுகிறேன். என் நாக்குகளால் வேறொரு பூவின் மகரந்தத்தை அட்சதையாகத் தூவுகிறேன்’ என்றது.

வெட்டுக்கிளியும், தேனீயும் கற்றுத் தருகிற வாழ்க்கைப் பாடம் ஒன்று உண்டு. நேரச் செடியின் கிளைகளில் சிலர் வெட்டுக்கிளியாக இருக்கின்றார் கள். ஆம், இவர்கள் நேரத்தை அழிக்கின்றார்கள். சிலர் தேனீக் களாக இருக்கின்றார்கள். இவர் கள் நேரத்தைப் பயனுள்ளதாக ஆக்கி தேனைப் பருகுகின்றார்கள்.

இளமையிலிருந்தே நேரத்தை புத்திசாலித்தனமாகப் புரிந்து பயன்படுத்துபவர்களுக்கு செழுமையான எதிர்கால வாழ்க்கை பரிசாகக் கிடைக்கும்.

நேற்று என்ன நடந்தது. இன்றைக்கு என்ன நடக்கப் போகிறதோ, நாளை என்ன நடக்குமோ? என்பதை விட, வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த நிமிடம் தான் நிஜமானது.

ஆங்கிலக் கவிஞர் லாங்பெலோ.....
‘கடந்து போன காலத்துக்காக வருந்திப் புலம்பாதீர்கள் அது மீண்டும் வருவதில்லை; கையில் இருப்பது இன்றைய பொழுது அச்சமின்றி துணிவோடு அணுகுங்கள் எதிர்காலத்தை’ என்பார்.

காலையில் கண் விழித்து எழும்போது உங்கள் கைகளில் புதிதான 24 மணி நேரம் கிடைக்கிறது. அதை விரயமாக்கி விடாமல் கவனமாகப் பயன்படுத் துங்கள். நீங்கள் ஆசைப்பட்டு செய்யும் செயலுக்கு அதிக நேரத்தை ஒதுக்குங்கள். அது உங்களை மேலே உயர்த்தும்.

Download As PDF

No comments:

Popular Posts