Ads

exclusivemails.net

Monday, March 1, 2010

இதுதாண்டி சினிமா. அத்தியாயம் 2


கேரளத்திலிருந்து கிளம்பி வந்தார் அந்த நடிகை. சேட்டன் பூமியில் சில்மிஷ படங்களில் நடித்திருந்தார். இதனாலேயே அவரின் கவர்ச்சியைப் பார்த்த பிறர் மீள முடியா இன்ப அவஸ்தையில் மிதந்தார்கள்.

அங்கே அப்படி நடித்திருந்தாலும் கூட நல்ல நடிப்பிலும் அவர் திறமையானவராக இருந்ததனால் கோலிவுட்டிலும் அம்மணிக்கு செம வரவேற்பு.

அதே சமயம் கொஞ்ச சம்பளத்தில் நடிக்கவைத்தவர்கள்... அம்மணியின் மீதிருந்த தீரா ஆசையையும் இலவசமாக தீர்த்துக் கொண்டார்கள். இதனால் பணத்தேவைகளுக்கு வெளியில் அவ்வப்போது டிஸ்கஷன் போய்வருவார். அதோடு... ரொம்ப பழகியவர்கள் ‘வேற சரக்கு’ கேட்டால் ரெடி பண்ணித்தருவார். இது அரசல் புரசலாக இண்டஸ்ட்ரி அறியும்.

அம்மணி வாழ்க்கையில் மிக முக்கியமாக அமைந்த படம்.... கோல்டு மெடல்.

இந்த சோதனைப்படம் பெரிய சாதனையை படைத்தது. வெளிநாடுகளிலும் பெரும் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை கொண்டாட... மலேசியாவில் தமிழ் ரசிகர்கள் அமைப்பு ஒரு விழா எடுத்தது.

நடிகர், இந்த நடிகை உட்பட பலரும் ஆஜர் அங்கே.

நாயகனுக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர் நாயகனைப் பார்க்க ஹோட்டல் அறைக்கு வந்தார்.

நடிகையின் மலையாளப் படங்களை பார்த்திருந்து பார்த்திருந்து பல வருட சபலத்தோடு இருந்த நாயகனின் நண்பர்...’ நான் அவங்களோட வெறித்தனமான ரசிகர். அவர்கிட்ட என்னை அறிமுகம் செய்து வைங்க’ என கேட்க.....

அன்று இரவு நடிகையை கூப்பிட்ட நாயகன்... ‘இவன் நம்ம பய. கவனிச்சுக்க’ எனச் சொல்ல.... நடிகை பதில் சொல்லாமல் சிரித்தபடி போய்விட்டார்.

சிறிது நேரத்திற்குப்பின் நடிகையின் அறைக்குப் போனார் நண்பர். அசடு வழிந்தார்.

நடிகையும் பெருந்தொகையைச் சொன்னார்.

அவர் சொன்ன பிறகும் ஏன் இம்புட்டு ரேட்? நான் அவர்கிட்ட போய் சொன்னா என்ன ஆகும் தெரியுமா?
அமைதி காத்தார் நடிகை.

‘என்ன முடிவு?’ என எகிறினார் நண்பர்.

இதுக்கெல்லாம் இலவசத்தையும், ரெகமெண்ட்டேஷனையும் எதிர்பார்த்தா எப்படி?’ எனக்கேட்டார் நடிகை.

அத்துமீறி உள்ளே நுழைய முயன்றார் நண்பர்.

படாரென கதவை சாத்திவிட்டார் நடிகை.

அவமானப்பட்ட நண்பர் நடிகரிடம் வந்து சொன்னார்.

‘நான் சொல்லியுமா?’ என கோப்பாவேசமானார் நடிகர். அந்த கோபத்தில் தூக்கமே வரவிலை நடிகருக்கு.

இறுக்கமும், ஆத்திரமுமாய் விழாவை முடித்துக் கொண்டு கிளம்பினார்கள்.

சென்னை வந்ததும் அந்த ஹீரோ செய்த முதல் காரியம் என்ன தெரியுமா?

அந்த சம்பவத்தால் தமிழகம் முழுக்க இதே பேச்சுதான் அப்போது!

அப்படி நடிகர் செய்த காரியம் என்ன?

அது.....

சென்னை வந்ததும் தன் செல்வாக்கை பிரயோகித்தார் நடிகர்.

அப்புறமென்ன..... விபச்சார வழக்கில் நடிகையை தூக்கி உள்ளே போட்டார்கள். அப்போது அந்த விவகாரம் நாடுமுழுக்க பரபரப்பாகப் பேசப்பட்டது.

இந்த கைது பின்ணனி தெரியாதவர்கள்... ‘பலநாள் திருடி ஒருநாள் அகப்பட்டுக் கொண்டார்’ என நினைத்தார்கள்.

இனி..... அடுத்த கதையை பார்ப்போம்.

வீணை போன்ற இசை கருவி ஒன்றின் பெயரைக் கொண்ட வித்தாராமான நடிகை அவர்.

அந்த மான் நடிகரோடு ஒரு படத்தில் நடித்தார். கதைப்படி... போர்வைக்குள் இருவரும் சில்மிஷம் செய்வது போல ஸீன். அந்த காட்சி எடுக்கப்பட்டுக் கொண்டிருந்த போது... நடிகை மீது மோகம் கொண்ட நடிகர்.. நடிகயின் அங்கத்தில் தொடக்கூடாத இடத்தில் தொட்டார்.

தெரியாம கை பட்டிருக்கும்னு நினச்ச நடிகை.. சும்மா இருந்தார். ஆனால் நடிகையிடம் எதிர்ப்பு இல்லாததால் தன் சில்மிஷத்தை மறுபடி தொடர்ந்தார் நடிகர்.

‘பய வெளாடுறானே’ என கடுப்பான நடிகை அடுத்த முறை நடிகரின் விரல் நீண்ட போது எதிர்ப்பு தெரிவித்தார் நடிகை.

‘நீ என்ன பத்தினி திலகமா?’ எனக் கேட்டு வைக்க.. போர்வையை விலக்கிக் கொண்டு எழுந்த நடிகை விட்டார் ஒரு பளார். அதிர்ந்து போனார் நடிகர். யூனிட் அரண்டு போனது.

நடிகை இப்படி கை நீட்டியது... அவரின் துணிச்சலைக்காட்டினாலும்... உடன் படாதா இவளோடு ஜோடி போட்டு ஒடு பிரயோஜனமும் இல்லை... என மற்ற ஹீரோக்கள் தங்கள் படங்களில் வாய்ப்புத் தராமல் விட்டனர்.

இதனால்... அழகும், திறமையும், இளமையும் நிறந்த அந்த வித்தாராம் விரைவிலேயே கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக டீ-புரமோட் பண்ணப்பட்டார்.

அதன் பின் குமார டைரக்டர் படம் ஒன்றில் பஞ்சாயத்து நடிகரோடு ஒரு படத்தில் முக்கிய ரோலில் நடித்தார்.

பஞ்சாயத்து பல முறை முயற்சி பண்ணியும் கண்டு கொள்ளவில்லை இந்த அழகுப் பொண்ணு.

இதனால் தன் நண்பரான டைரக்டரை கூப்பிட்டார்.

‘அந்த கட்டிப்பிடிக்கிற ஸீனை... அதோடு நிறுத்தாம அப்படியே.... தொடர்ந்து உருண்டு புரள்வது போல நீட்டச் சொன்னார்.

அதன்படியே காட்சி அமைக்க ஏற்பாடு ஆனது.

ஸ்டார்ட்... கேமரா... அக்‌ஷன்....

சத்தம் கேட்டதுமே.... நடிகையை பாய்ந்து பிடித்து உருட்டோ உருட்டென உருட்டி தன் தாகத்தை வெளிப்படுத்தினார் பஞ்சாயத்து.

ஏற்கனவே ஒருமுறை கை நீட்டியதால் வாய்ப்புகல் பறிபோனதால்..... இந்த முறை அமைதியாகவே இருந்தார்.

‘எதுக்காக இந்த உருட்டல்னு தெரியும். ஆனாலும் நான் சம்மதிக்க மாட்டேன்.... என்பது போல ஒரு பார்வை பார்த்தார்.

விளைவு அந்த படத்தில் அந்த நடிகையின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டது.

இப்படி கட்டுப்பாடாக இருந்தவரை..... உருட்டி உருட்டி கரைத்து காரியம் சாதித்தார்கள் பின்னாளில்.

ஹீரோவுக்கு வயசு அதிகம்!

ஹீரோயினுக்கு கம்மி.

ஆனால் ஹீரோ... ரொமபவே தொல்லை தர.... மேக்-அப் மேனை வைத்து ஹீரோவுக்கு வச்சாரே ஒரு ஆப்பு!

அந்த ஆப்பு... ஸீன்..... வரும்..

Download As PDF

1 comment:

சதீஷ் said...

தலைவரே.....
க்ளூவை வைத்து யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அடுத்த பதிவுகளில் எளிதான க்ளூவாகத் தரவும்.

பதிவு மிகவும் அருமை. இ.சி.3 - எதிர்ப்பார்க்கிறோம்.

Popular Posts