Ads

hariprasanth

exclusivemails.net

Saturday, June 5, 2010

அமைதிப் படைக்கு அஞ்சும் இஸ்ரேல்



"எவராலும் வெல்ல முடியாத நாடு!" என்ற பெயரெடுத்த இஸ்ரேல் வரலாற்றில் முதன் முறையாக தோல்வியை சுவைக்கத் தொடங்கியிருக்கிறது. பி.எல்.ஒ.வின் தேசியவாதமும், ஹமாசின் இஸ்லாமியவாதமும் அடைய முடியாத இலக்கை சர்வதேசிய சித்தாந்தம் சாதித்துக் காட்டியுள்ளது. ஆயுதத்தால் அசைக்க முடியாத இஸ்ரேலை அஹிம்சை மிரட்டுகிறது. மே 31 இரவு நடுக்கடலில் காசா நோக்கி சென்று கொண்டிருந்த நிவாரணக் கப்பல் (Mavi Marmara) இஸ்ரேலிய படையினரின் பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளானது. சர்வதேச கடற்பரப்பில் கடற்கொள்ளையர்கள் போல நடந்து கொண்ட இஸ்ரேலின் அத்துமீறல் சர்வதேச கண்டனங்களை எழுப்பியுள்ளது. இஸ்ரேலிய படையினரின் திடீர் தாக்குதலில் 20 ஆர்வலர்கள் மரணமடைந்துள்ளனர். பலியானவர்களில் பலர் துருக்கிய பிரஜைகள், ஒருவர் அமெரிக்கர்.

தனது படையினரை பயங்கர ஆயுதங்கள் கொண்டு தாக்கியதால், "தற்பாதுகாப்பு கருதியே" நிவாரணக் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியது. மேலும் ஹமாசுக்கு கொடுப்பதற்காக கப்பலில் ஆயுதங்கள் கடத்தப் பட்டதாகவும் தெரிவித்தது. துருக்கி தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான "மாவி மர்மரா" என்ற பயணிகள் கப்பலே தாக்குதலுக்கு உள்ளானது.(காசாவில் இருந்து 65 கி.மி. தொலைவில்) தாக்குதல் நடந்த நேரம் மாவி மர்மரா உட்பட பல கப்பல்கள் காசா நோக்கி சென்றுள்ளன. 700 தொண்டர்களும், 10000 தொன்கள் நிவாரணப் பொருட்களும் இருந்துள்ளன. கப்பல்களில் சென்ற அனைவரும் இஸ்ரேலிய படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களில் அமெரிக்கா, ஐரோப்பா உட்பட பல்தேசத்தவர்கள் அடங்குவர். பெரும்பான்மையானோர் விடுவிக்கப்பட்டு துருக்கிக்கு நாடு கடத்தப்பட்டனர். கப்பல்களையும், நிவாரணப் பொருட்களையும், அதனோடு தொண்டர்களின் உடமைகளையும் இஸ்ரேலிய படையினர் அபகரித்து வைத்துள்ளனர். செல்லிடத் தொலைபேசிகள், மடிக்கணனிகள் எதையும் திருப்பிக் கொடுக்கவில்லை.

நாடு கடத்தப் பட்ட தொண்டர்கள் வழங்கிய நேர் காணல்கள், இஸ்ரேல் அறிவித்ததற்கு முரணாக உள்ளன. இஸ்ரேலிய படையினர் ஹெலிகாப்டரிலும், கடற்படைக் கப்பல்கள் கொண்டும் சுற்றி வளைத்து சுட்டுள்ளனர். அப்போதே முதல் பலிகள் விழுந்து விட்டன.(
Israelis opened fire before boarding Gaza flotilla, say released activists) மாவி மர்மரா கப்பலை கைப்பற்றும் நோக்குடன் ஹெலிகாப்டரில் இருந்து குதித்த படையினர் இறங்கிய உடனே சுடத் தொடங்கினார்கள். அதன் பிறகே தற்பாதுகாப்புக்காக சில ஆர்வலர்கள் இஸ்ரேலிய படையினரை தாக்கி உள்ளனர். வீட்டுக்குள் அத்துமீறி நுழையும் திருடனை தாக்குவது போன்ற நடவடிக்கை அது. அந்த சம்பவத்தை மட்டும் வீடியோ பண்ணி, இஸ்ரேல் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்தது. "இதோ பாருங்கள். எமது படையினரை தாக்குகிறார்கள். அதனால் தற்பாதுகாப்புக்காக சுட்டோம்." என்றார்கள். ஆனால் நடந்த சம்பவத்தை படம் பிடித்துக் கொண்டிருந்த செய்தியாளர்களின் கமெராவில் இவ்வாறு பதிவாகி உள்ளது. "அவர்கள் எம்மை நோக்கி சுடுகிறார்கள்... வெள்ளைக்கொடி உயர்த்திய போதிலும் சுடுகிறார்கள்... கிரனேட்கள்,நிஜமான துப்பாக்கி குண்டுகளை பாவிக்கிறார்கள்... சிலர் காயமடைந்துள்ளனர்...." அரபி, ஆங்கிலம், துருக்கி மொழி செய்தியாளர்கள் மாறி மாறி அறிவிக்கிறார்கள். (RAW FOOTAGE: Israel navy massacres on one of Gaza Freedom Flotilla) அந்த வீடியோ தான் கடைசியாக செய்மதி தொடர்பை பயன்படுத்தி அனுப்பப் பட்டது. அதன் பிறகு இஸ்ரேலிய படையினர் செய்மதி தொடர்பை துண்டித்து விட்டார்கள். அல் ஜசீராவுக்கு கிடைத்த அந்த எடிட் செய்யப்படாத வீடியோ ஏனோ ஒளிபரப்பப்படவில்லை. ஈரான் தொலைக்காட்சி Press TV யில் மட்டுமே காண்பிக்கப் பட்டது.

தாக்குதல் சம்பவம் நடைபெற்ற அடுத்த நாள், அல் ஜசீரா இஸ்ரேலிய அமைச்சர் ஒருவரை நேர்கண்டது. அதில் அவர் "நிவாரணக் கப்பலில் ஆயுதங்களும், வெடி மருந்துகளும் கண்டுபிடிக்கப் பட்டதாக" தெரிவித்தார். இஸ்ரேல் ஆர்வலர்கள் அனைவரையும் கைது செய்து, கப்பலையும் தடுத்து வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு நாட்களுக்கு பின்னர் மீண்டும் அதே அமைச்சரை பேட்டி கண்டது அல்ஜசீரா. "கைப்பற்றிய ஆயுதங்களையும், வெடி பொருட்களையும் ஆதாரஙகளுடன் காட்டுமாறு" கேட்டது. அதற்கு அந்த அமைச்சர் "ஆயுதங்களை கண்டெடுத்ததாக அன்று நான் சொல்லவே இல்லை!" என்று மழுப்பினார். இதற்கிடையே கப்பலில் தொண்டராக சென்று நாடுகடத்தப் பட்ட சுவீடிஷ் எழுத்தாளர் ஒருவர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அதிலே அவர் கூறியதாவது: "இஸ்ரேலிய படையினர் என்னை கைது செய்து விட்டு, எனது உடமைகளை பரிசோதித்தார்கள். பயங்கர ஆயுதம் ஒன்றை வைத்திருந்ததாக என் மீது குற்றம் சுமத்தினார்கள். அவர்கள் காட்டிய பயங்கர ஆயுதம் என்ன தெரியுமா? எனது ஷேவிங் ரேசர்!"

இஸ்ரேலிய பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் துருக்கியர்கள். இதனால் துருக்கியில் இஸ்ரேலுக்கு எதிரான அலை எழுந்துள்ளது. இஸ்தான்புல் நகரில் இஸ்ரேலிய துணைத் தூதுவராலயத்தை முற்றுகையிட்ட மக்கள் திரள், தூதுவராலயத்தினுள் நுளைய விடாது துருக்கி பொலிஸ் தடுத்தது. துருக்கி பிரதமர் இஸ்ரேலுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார். இஸ்ரேலுடன் நட்புறவைப் பேணி வந்த மிகக் குறைந்த முஸ்லிம் நாடுகளில் ஒன்று துருக்கி. இரண்டு நாட்டு இராணுவங்களும் இணைந்து பயிற்சிகளை மேற்கொண்டு வந்தன. இது வரை காலமும் இருந்து வந்த உறவு இறுதிக் கட்டத்தை அடந்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் முக்கியமான நண்பனை, இஸ்ரேல் இழக்கின்றது. மேலும் துருக்கி நேட்டோ இராணுவக் கூட்டமைப்பிலும் உறுப்பினர். "நேட்டோ உறுப்பினர் ஒருவர் தாக்கப் பட்டால் அனைவரும் சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்ற சட்டம் இப்போது பரீட்சித்துப் பார்க்கப்பட வேண்டிய நிர்ப்பந்தம். துருக்கி நட்பு பாராட்டிய அமெரிக்கா இஸ்ரேலின் குற்றத்தை கண்டிக்கவில்லை. இது அமெரிக்க - துருக்கி உறவில் விரிசலை ஏற்படுத்தி உள்ளது.

Free Gaza என்ற அரசு சாரா சர்வதேச தொண்டு நிறுவனம் நிவாரணக் கப்பல்களை காசாவுக்கு அனுப்பி வைத்தது. ஆகஸ்ட் 2008 இவர்களது கப்பல்கள் காசா போய் சேர்ந்தன. அப்போது காசா பகுதியில் இஸ்ரேலிய கடற்படை பயிற்சியில் ஈடுபட்டிருப்பதாக பயமுறுத்தல் விடுக்கப்பட்டது. அதையும் மீறி அந்தக் கப்பல்கள் நிவாரணப் பொருட்களை பசியால் வாடும் காசா மக்களுக்கு கொண்டு சென்று கொடுத்தன. கடந்த இரண்டு வருடங்களாக காசா பிரதேசம் இஸ்ரேலினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. உணவு உட்பட அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல தடை உள்ளது. ஐ.நா., செஞ்சிலுவைச் சங்கம் அனுப்பும் பொருட்களைக் கூட, மூன்றில் ஒரு பங்கு மட்டுமே போக அனுமதிக்கப் படுகின்றது. சுருக்கமாக சொன்னால், ஒரு பெரிய தடுப்பு முகாமினுள் காசா மக்கள் கைதிகளாக அடைத்து வைக்கப் பட்டுள்ளனர். (பார்க்க: காஸா: முற்றுகைக்குள் வாழ்தல்)

Free Gaza அமைப்பில் பல சர்வதேச பிரபலங்கள் அங்கம் வகிக்கின்றனர். ஹாலிவூட் நடிகர்கள், கிரேக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், நோபல் பரிசு பெற்றவர்கள், ஐரோப்பிய மத்திய வங்கி தலைமை நிர்வாகியின் மனைவி, எழுத்தாளர்கள், கவிஞர்கள் என்று பல்துறை சார்ந்தவர்கள். அமெரிக்கா, கனடா, அயர்லாந்து, பிரிட்டன், நெதர்லாந்து, சுவீடன், ஸ்பெயின், கிறீஸ், பிறெசில், மலேசியா என்று பல்வேறு தேசங்களின் பிரஜைகள். இந்த சர்வதேச அமைதிப்படை இஸ்ரேலின் அரச பயங்கரவாததை கண்டு பயந்து ஓடி விடவில்லை. இன்னும் நூறு கப்பல்களில் வந்து கொண்டே இருப்போம் என்று சூளுரைத்துள்ளனர். "Mavi Marmara துன்பியல் சம்பவம்" நடந்து கொண்டிருந்த தருணத்தில் கூட அயர்லாந்தில் இருந்து புறப்பட்ட நிவாரணக் கப்பல் ஒன்று காசா நோக்கி வந்து கொண்டிருந்தது. இன்னும் இரண்டு தினங்களில் அது காசா கரையை தொட்டு விடும். அந்தக் கப்பலின் பெயர் "Rachel Corrie". யார் இவர்? 2003 ம் ஆண்டு காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட, அமெரிக்காவை சேர்ந்த சமூக ஆர்வலர். இஸ்ரேலிய படைகள் மக்களின் வீடுகளை இடித்த பொழுது தன்னந்தனியாக எதிர்த்து நின்று போராடினார். அதற்காக அந்த இளம் யுவதி மீது புல்டோசரை ஏற்றி கொன்றார்கள். மக்களுக்காக மரித்த தியாகி Rachel லின் ஆவி இஸ்ரேலை பிடித்தாட்ட வந்து கொண்டிருக்கிறது.
Download As PDF

Saturday, May 15, 2010

முல்லைப்பாட்டென்னும் நெஞ்சாற்றுப்ப....



சங்கத் தமிழ் ஓர் இலக்கியப் பேழையாகும். இஃது மக்கள் படித்துப் பயன்பெறும் வற்றாத செல்வமாகவும் விளங்குகிறது. ‘இலக்கணச் செறிவும் இலக்கியத் தகுதியும் உடையவர்களாக விளங்கிய சங்க காலப் புலவர் பெருமக்களால் பாடப்பெற்றவையாக இன்று நமக்குக் கிடைக்கும் பாடல்கள் மொத்தம் 2381’ ஆகும்.
ஒரு காலகட்டத்தில் எஞ்சிய பாடல்களை எல்லாம் தொகுத்துக் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வு தோன்றியிருக்கிறது. அதன் காரணமாகச் சங்க காலத்தைச் சார்ந்த அரசர் பெருமக்களும் ஆர்வலர்களும் சங்கப் பாடல்களைத் தேடித் தொகுத்து முறைப்படுத்தும் பணியைத் தொடங்கினர். இந்த தேடுதல் பணியின் விளைவாகக் கிடைத்த பாடல்கள் எட்டுத் தொகை, பத்துப் பாட்டு என்ற இரு தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டன.
சங்க இலக்கிய நூல்களைப் பதினெண்மேல்க் கணக்கு என்றும், சங்க காலத்தை அடுத்துத் தோன்றிய நூல்களைப் பதினெண் கீழ்க்கணக்கு என்றும் பாகுபாடு செய்துள்ளனர். பிற்காலத்தில் தோன்றிய பன்னி ருபாட்டியல் என்ற இலக்கண நூல் மேல்க்கணக்கு என்பதற்கு
‘ஐம்பது முதலா ஐந்நூறு ஈறா ஐவகைப் பாவும்; பொருள் நெறிமரபில் தொகுக்கப்படுவது மேல்க்கணக்காகும்’
என்று விளக்கமளிக்கின்றது-
சங்க இலக்கியத்தில் கலித்தொகை, பரிபாடல் தவிர பெரும்பான்மையான பாடல்கள் ஆசிரியப்பாவால் அமைந்துள்ளன. இத்தகைய பாடல்களை மூன்றடி முதல் முப்பத்தொரு அடி வரையுள்ள பாடல்களைத் தொகையாகத் தொகுத்தனர்.
103 அடிகளுக்கு மேலுள்ளள ஆசிரியப்பாவால் அமைந்த பாடல்கள் பத்தினைப் பத்துப்பாட்டு எனத் தொகுத்தனர், பாட்டும் தொகையும் என்பது பழங்கால உரையாசிரியர் வழக்கு. நச்சினாக்கினியர் உரைச் சிறப்புப் பாயிரத்தில்,
“ஆன்றோர் புகழ்ந்த அறிவினில் தெரிந்து சான்றோர் உரைத்த தன்தமிழ் தெரியல் ஒருபது பாட்டும்”
எனக் கூறப்பெறுவதும், பத்துப்பாட்டுக் கற்பனைகளும், கதைகளும் நிறைந்த காவியமன்று. கண்ணாற் கண்ட காட்சிகளை அப்படியே எழுதியிருக்கும் சொல் ஓவியமாகும். ஆசிரியர் சுந்தரம் பிள்ளை பத்துப் பாட்டின் பெருமையை,
“பத்துப் பாட்டாதி மனம் பற்றினார் பற்றுவரோ எத்துணையும் பொருட்டு இசையும் இலக்கணமில் கற்பனையே”
என்று மனோன்மணியத்தில் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
திருமுருகாற்றுப்படை, பொருநராற் றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப் பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்பன பத்துப்பாட்டு நூல்களாகும். இதனை
“முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை பெருகு வளமதுரைக்காஞ்சி - மருவினிய கோலநெடுதல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து”
என்ற பழஞ்செய்யுள் தெளிவுறுத் துகிறது. இவற்றுள் திருமுருகாற்றுப்படை QuickBooks Pro 2010பொருநராற்றுப்படை, சிறுபாணாற் றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் என்ற ஐந்தும் ஆற்றுப் படை என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தன. இவ்வைந்தும், மதுரைக் காஞ்சியும் புறப்பொருள் பற்றிக் கூறுவன. முல்லைப்பாட்டு, குறிஞ் சிப்பாட்டு, பட்டினப்பாலை என்ற மூன்றும் அகப்பொருள் பற்றியன. நெடுதல்வாடை அகமும், புறமும் பற்றியது ஆகும். பத்துப்பாட்டு முழுமைக்கும் நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார்.
முல்லைப்பாட்டு ஆசிரியர் காவிரிப்பூம்பட்டினத்ததுப் பொன் வணிகனார் மகனார் நப்பூதனார். இவருடய இயற்பெயர் பூதனார் என்பதும் ஆகும்.
கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்கிய சான்றோர்களின் இயற் பெயருக்கு முன்னர் ‘ந’ என்னும் சிறப்புப் பொருளைத்தரும் இடைச் சொல்லைத் சேர்த்து வழங்குதல் மரபு. இவர் வணிகர் குடித் தோன் றலாயினும் மன்னருடன் மற்றும் அவர்நம் படைகளுடன் பெரிதும் பழகியவர் எனலாம்.
இவர் தந்தையார் பொன்வாணிகர் என்பதும் இவர் சோழ நாட்டுத் தலைநகரில் பிறந்து வளர்ந்தவர் என்பதும் இவரின் பெயரிலிருந்து அறிந்துகொள்ளலாம். இவரைப்பற்றி நச்சினார்க்கினியர் கூறியதாவது : ‘எட்டுத்தொகை முதலியவற்றில் இவரியற்றியதாக ஒன்றும் காணப்படவில்லை.
காவிரிப்பூம் பட்டினத்திற் சதுக்கத்துப் பூதம் முதலிய பலரால் வழிபடத் தக்கனவாகவும் இருந்து வந்தமையின் அவற்றுள் ஒன்றை நினைந்து பூதனென்னும் பெயர் இடப்பட்டது போலும், கூறியிருத்தலால் இவர் நல்ல வீரம் பொருந்திய அரசர்களோடு பழகிய வரென்று தோன்றுகிறது” என்று கூறியுள்ளார்.
முல்லைப்பாட்டு ஆசிரியரின் காலத்தை அறிய உறுதியான சான்றுகள் இல்லை. முல்லைப்பாட்டில் யவனரைப் பற்றியும், மிலேச்சரைப் பற்றியும் குறிப்புகள் வருகின்றன. நெடுநல் வாடையிலும் இதுபோன்ற குறிப்புகள் வருகின்றன. நெடுநல்வாடையிலும் இதுபோன்ற குறிப்புகள் காணப்படு வதால் நெடுதல் வாடை தோன்றிய காலத்தை அடுத்து முல்லைப்பாட்டு தோன்றியிருக்க வேண்டும் என்று அறிஞர் இராஜமாணிக்கனார் முல்லைப்பாட்டின் காலத்தைக் கணித்திருக்கிறார். நற்றிணையில் உள்ள 26ஆம் பாடலை இயற்றிய நப்பூதனாரும், முல்லைப்பாட்டின் ஆசிரியர் நப்பூதனாரும் ஒருவரே என்ற ஒரு கருத்தும் உள்ளது.
பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானம் என்னுமிடத்தில் தன்னைப் பகைத்து எதிர்த்த சேரன், சோழன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருகன் என்னும் அரசர் எழுவரோடும் போர்புரிதற் பொருட்டுச் சென்ற போது அவன்றன் மனைவி கொழுதன் பிரிந்த துயரத்தை ஆற்றிக் கொண்டிருந்த அருமையும் அவன் +yரிவி:(வி எல்லாம் வென்று தான் சொன்ன வண்ணம் கார்காலத் துவக்கத்திலே மீண்டு வந்ததையும் கண்டு நம்பூதனார் முல்லைப்பாட்டைப் பாடினார்.

முல்லைப்பாட்டின் அமைப்பு
முல்லைப்பாட்டு பத்துப்பாட்டுள் ஐந்தாம் பாட்டாக விளங்குகிறது. இது நூற்று மூன்று அடிகளைக் கொண்டு விளங்கும் சிறு நூல். முல்லைத்திணையின் ஒழுக்கத்தைச் சிறப்பித்துப் பாடுவது முல்லைப் பாட்டாகும். முல்லைக்குரிய உரிப் பொருள் இருத்தல், இருத்தல் நிமித்தமும் பாட்டில் கூறப்பட்டுள்ளது.
இருத்தல் என்றால் ஆற்றிக் கொண் டிருத்தல் என்பது பொருளாகும். தலைவன் பிரிந்து சென்றால் ஏற்படும் வருத்தத்தைத் தலைவி பொறுத்துக் கொண்டிருத்தல் என்பதாகும். கற்பின் விளக்கம் கூறுவோர் எத்தகைய துன் பம் வரினும் தன்னிலையில் தளராது விளங்கும் ஒருத்தியை முல்லை சான்ற கற்பினள் என்பர். அத்தகைய முல்லை சான்ற கற்பினள் ஒருத்தியின் கற்புத் திறத்தை விளக்குவதாக முல்லைப்பாட்டு அமைந்துள்ளது.
மாற்றானை வென்று தன்னடிக்கீழ் வாழும் மன்னுயிர்க்கு நல்வாழ்க்கை தரும் பொருட்டு போர் மேற்சென்ற தலைவன் தான் வரும் வரையில் ஆற்றியிருக்க வேண்டும் என்று அன்பு டன் தன் தலைவியிடம் வேண்ட அவளும் அவ்வாறே ஆற்றியிருந்தாள். தலைவனும் தான் குறித்த காலத்தில் திரும்பி வந்து அவளைக் கூடி இன்புற்றான். இவ்விருவரின் கடமைகளையும் திறத்தையும் இந்நூல் எடுத்தியம்புகிறது.
தலைமகன் ஒருவன் தன் மணக் கிழத்தியைப் பிரிந்து பகை மன்னரோடு போர் செய்யப் போகிறான். அவ்வாறு சேர்பவன் போர் வினை முடித்துக் கார் காலத் தொடக்கத்தே வந்து விடுவேன். நீ ஆற்றியிருப்பாய் எனக் கூறிச்செல்கிறான்.
தன் தலைவன் கூறியது போல் மிக அருமையாக ஆற்றி யிருந்த தலைவி கார் காலம் தொடங் கிவிட்டதை அறிந்ததோடு வரவேண்டிய தலைவன் வராமையறிந்து தலைவி வருந்துகின்றாள். அவ்வாறு வருந்தும் அவளுக்காகச் செவிலித்தாயா நற்சொல் கேட்கின்றனர். அவ்வாறு கேட்டடவர் நின் தலைவர் இப்போதே வருவார் நீ இன்னும் சற்று ஆற்றியிருத்தல் வேண்டும் எனத் தேற்றுகின்றனர். தலைவி பெருமூச்சு விட்டாள்.
இந் நிலையில் அவள் மகிழுமாறு தலைவன் வரும் தேரில் பூட்டப்பட்ட குதிரைகளின் ஆரவாரம் கேட்டு தலைவி மகிழ்கிறாள்.
 
Download As PDF

Saturday, May 1, 2010

இந்தியாவிலேயே இவருதான்! - கரண் பட களேபரங்கள்....



Actress Kushboo
பனை மரத்து நிழல்ல பாய விரிச்சு படுத்த மாதிரிதான் பாடா படுத்துது ஆக்ஷன் படங்களோட நிலைமை! நிழலும் ஒரு அடி. நிம்மதியும் அதுக்குள்ளேதான்கிற மாதிரி வர்ற ஆக்ஷன் படங்களோட அந்தஸ்தை, கிரேன் வச்சு து£க்கும் போலிருக்கு கரண் நடிச்ச 'கனகவேல் காக்க' படம்!.
கதையின் தேவை கருதி கரண், தன்னையும் தன் இமேஜையும் அழித்துவிட்டு கதாபாத்திரத்தின் பலத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் அவர் ஹீரோவாகவோ, சாதாரண மனிதனாகவோ இல்லை. நம் ஒவ்வொருவரின் மனசாட்சியாக இருக்கிறார். இந்த துணிச்சல் அபூர்வமானது என்று பூடகமாக போட்டு தாக்கும் இயக்குனர் கவின் பாலா, படத்தில் துப்பாக்கி ஒன்றையும், பேனா ஒன்றையும் பாத்திரங்களாகவே உலவ விட்டிருக்கிறாராம். பொதுவாகவே தங்கள் பட ஹீரோவை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் எந்த டைரக்டரும். ஆனால் கவின் பாலா கண்களில் தெரிகிற நம்பிக்கை, "இது நெசந்தான்யா" என்கிறது ஒவ்வொரு முறையும்! இந்திய சினிமாவில் எந்த ஹீரோவும் மேற்கொள்ளாத ஒரு புதிய முயற்சியை இந்த படத்தில் கரண் செய்திருக்கிறார் என்கிறார் இந்த அறிமுக இயக்குனர்.
சுஜாதா, பாலகுமாரன் வரிசையில் பத்திரிகையிலிருந்து சினிமாவுக்கு வந்திருக்கிறார் பா.ராகவன். "நான் இந்த படத்தின் வசனங்களில் வாழ தொடங்கி விட்டேன்" என்றாராம் படத்தின் எடிட்டர் சுரேஷ் அர்ஸ். அப்படியரு விறுவிறுப்பான வசனங்களை எழுதியிருக்கிறாராம் பா.ராகவன்.
கவின்பாலா சொல்கிற விஷயங்களில் ஒரு அரிதாரமில்லாத உண்மை இருக்கிறது. எப்படி? இந்த படத்தின் ஒரு ஏரியாவை விலை பேசுவதற்காக ப்ரிவியூ பார்த்தாராம் ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷனின் சதீஷ்குமார். அப்புறம்? நானே எல்லா ஏரியா ரிலீசையும் பார்த்துக்கறேன் என்று மொத்தமாக அள்ளிக் கொண்டாராம்.
கவின்பாலாவின் வரவு, கலையுலகின் 'கும்ப மேளா'வாக இருக்கட்டும்..
Download As PDF

Popular Posts