Ads

exclusivemails.net

Monday, January 25, 2010

உன்னையே வெற்றி கொள்!


சும்மா இருக்கிறேன்’, ‘அது என்னால் முடியாது’, ‘தப்புக்கு அவர்தான் காரணம்’ எனக்கு வசதி இல்லை நேரம் இல்லை இவைதான் உங்களின் வெற்றியைத் தடுக்கின்றனர் முதலில் உங்களிடம் இருந்து இவற்றை வெளியே தள்ளி வெற்றி கொள்ளுங்கள். அப்போதுதான் இலக்கை அடைவீர்கள்.

1953ம் ஆண்டு யேல் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு நடந்தது. 10ம் வகுப்பு படிக்கும் 1,500 மாணவ மாணவிகளை இருபது ஆண்டுகளுக்குப் பிறகு என்னவாக போகிaர்கள் என்று ஒரு துண்டு சீட்டில் எழுதித்தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, அப்போது என்னவாக இருக்கிறார்கள் என்பதையும் ஒரு துண்டு சீட்டில் எழுதிக்கொடுத்தனர். இரண்டையும் ஒப்பிட்டு பார்த்ததில் மொத்தத்தில் மூன்று சதவீதத்தினர்தான் தாங்கள் எண்ணியதைப் போன்று சாதனையை ஏற்படுத்தி இருந்தது அறியப்பட்டது.

ஆம் அது உண்மைதான். குழந்தைப் பருவத்தில் பலருக்கும் ஆயிரம் கனவுகள். அதில் ஆழமாக இறங்கி வெற்றிகண்டவர்கள் சிலரே. பலரால் ஏன் முடியவில்லை?

அதற்கு ரெடிமேடாக காரணங்கள் இருக்கின்றன. ‘என் உடல் நலம் சரியாக இருந்திருந்தால், எனக்கு மட்டும் யோகம் இருந்திருந்தால், என் குடும்பச் சூழல் சரியாக இருந்திருந்தால்’ என்று காரணங்களை அடுக்கிக் கொண்டே செல்கிறார்கள். ஆனால் இவற்றைவிட முக்கிய காரணம் என்னவென்றால் அவர்களுக்கு தீவிரமான ஈடுபாடு இல்லாததுதான் என்று கூறலாம்.

கிறிஸ்து பிறப்பதற்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சோதிடர் ஏழு வயது நிரம்பிய சிறுவனது கைரேகைகளை கவனித்து, ‘இவனுக்கு கல்வி ரேகையே இல்லை. ஆகவே கற்று பண்டிதராக வாய்ப்பு கிடையாது’ என்றார். உடனே அந்தச் சிறுவன் வீட்டிற்குள் சென்று ஒரு கத்தியை எடுத்து தனது உள்ளங்கையில் உரிய இடத்தில் கீறி சோதிடனைப் பார்த்து தற்போது உள்ளங்கையில் அறிவு ரேகை ஓடுவதாகக் கூறினார். அந்தக் சிறுவன்தான் சமஸ்கிருத மொழி இலக்கணத்தில் தலை சிறந்து விளங்கிய பாடகி ஆவார்.

இதேபோல் சகோதரர்களில் மூத்தவராக இருப்பவர்தான் முடிசூடத் தகுதி உடையவர் என்ற மரபு இருக்கும்போது, ஒரு சோதிடர் இளையவருக்குத்தான் அத்தகைய வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார். அதை பொய்யாக்க நினைத்த இளையவர் துறவரம் பூண்டார். அவர் அனைவராலும் புகழப்பட்ட இளங்கோவடிகள்தான்.

ஓடுகின்ற நதியில் அடித்துச் செல்லப்படும் மிதப்புக் கட்டைபோல இருந்தால் நதிபோகும் போக்கில் சென்று நதி கலக்குமிடத்தைச் சேர்வதுதான் விதி. மாறாக நதியை எதிர்த்து நீந்துதல் அல்லது இரு கரைகளில் எதையாவது பற்றி ஒதுங்கி கரைசேர்வது போன்றவை முயற்சி சார்ந்தது. நாம் பிறரை நம்புவதில் தயக்கம் காட்டுவதில்லை. ஆனால் நம்மீது நமக்குத்தான் அவ்வளவு சுலபமாக நம்பிக்கை ஏற்படுவதில்லை. நம்மீதே சந்தேகம், கவலை, எதிர்மற எண்ணங்கள் தோன்றும்போது தயக்கம் வந்துவிடுகிறது. மற்றவர்கள் நமது செயல்களைப் பற்றி குறை கூறும்போது மனம் மேலும் சோர்வடைகின்றது. இதுவும் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது.

தன்னையே முழுமையாக நம்பிச் செயல்படும்போது தயக்கமின்றி செயல்பட முடிகிறது. நம்பிக்கை குறைவு இருந்தாலும் படிப்படியாக தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ள முயற்சி செய்யும்போது நமது ஆற்றலின் மீதும் நம்பிக்கை ஏற்படுகின்றது. செயல்களைச் செய்ய ஊக்கம் பிறக்கிறது.

பலம், பலவீனத்தை எடைபோடுவதற்காக உங்களை நீங்களே இனங்காண வேண்டும். எந்த சூழ்நிலையில் உங்களை நீங்களே நம்பி செயல்படுகின்aர்கள். எந்த சூழ்நிலை உங்களது நம்பிக்கையை சிதைக்கின்றது என்பதை அடையாளம் காணுங்கள். பல்வேறு அனுபவங்களை எதிர்கொள்ளும்போது எவ்வாறு செயல்படுகின்aர்கள் என்று உங்களை நீங்களே கண்காணிக்கும்போது ஆபத்தில் இருந்து எவ்வாறு எச்சரிக்கை உணர்வுடன் தற்காத்துக்கொள்ள வேண்டும் என்று உணர முடியும். உங்களிடமுள்ள குறைகளை இனங்கண்டு சரிசெய்து கொள்வது மட்டுமல்லாமல் உங்களது நிறைகள், தனித்தன்மை ஆகியவற்றிற்கும் முக்கியத்துவம் அளிக்கத் தவறாதீர்கள்.

உங்களை நீங்கள் முழுமையாக அறியும்போது அதாவது, உங்களது பலம், பலவீனம் ஆகியவற்றை அறியும்போது அவற்றை மனதளவில் ஏற்றுக்கொண்டு உரிய முயற்சிகள் மேற்கொள்ள தொடங்குவீர்கள். உங்களது முடிவு அல்லது தீர்ப்பை நீங்கள் முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளப் பழகுவீர்கள். உண்மையான சுய நம்பிக்கை என்பது ஆணவத்தால் உருவான ஒன்றல்ல. அது ஆழமான புரிதலால் உண்டான ஒன்றாகும்.

தானாக செயல்பட பழகும்போது உங்களிடமுள்ள திறமையை முழுமையாக வெளிப்படுத்துவீர்கள். இத்தகைய முயற்சியில் ஈடுபடும்போது பிறரது ஏளன பேச்சுக்களைப் பொருட்படுத்தக்கூடாது. செயல்படும்போது எதிர்கொள்ளும் தவறுகளை இனங்கண்டு திருத்திச் கொள்ளப் பழக வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் உங்கள் மனதில் தோன்றினாலும் பிறர் கூறக் கேட்டாலும் அவற்றிற்கு செவி சாய்க்காதீர்கள்.

உருவத்தில் குள்ளமான தோற்றத்தை உடைய கிங்காங் என்ற சங்கர் கலை உலகில் நகைச்சுவை வேடங்கள் ஏற்று நடித்து வருகிறார். இவரது சொந்த ஊர் வந்தவாசி. ஐந்தாவது வகுப்பு படித்த பின்பு படிப்பு வரவில்லை என்பதை உணர்ந்தவுடன், நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் கலை உலகில் இடம்பிடித்து திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

இவரது உருவத்திற்கும் பெயருக்கும் சம்பந்தம் இல்லை. கிங்காங் என்றால் தாராசிங் என்ற பயில்வானுடன் மல்யுத்தம் செய்த கிங்காங் என்பவரின் பெயரை தனது பெயராக சூட்டிக்கொண்டு தனது தன்னம்பிக்கையாலும் திறமையாலும் கிங்காங்கின் பலத்தை பெற்று திகழ்கின்றார்.

இவர் திரைப்படத்தில் நடிப்பார் என்று உறவினர்களோ, அவரது ஊரைச் சேர்ந்தவர்களோ கருதவில்லை. ஆனால் அவருக்கு அவரது திறமை மீது நம்பிக்கை இருந்தது. அவரது உருவத்தை ஏளனமாக கூறியபோதும், மனம் தளராமல் விடா முயற்சியுடன் நடிப்பு, நடனம் என்று ரசிகர்களை கவரும் விதத்தில் கலை உலகில் முத்திரை பதித்து வருகின்றார்.

இவருக்கு சமீபத்தில் உயரிய விருதான ஜனாதிபதி விருது கிடைத்துள்ளது. உருவத்திலுள்ள குறைபாடுகளை எண்ணி விதியை நொந்துகொண்டால் வாழ்வில் சாதனையாளராக முடியாது என்று நன்கு உணர்ந்ததுதான் அவரை உயர்த்தியது. அவர் மீது அவர் கொண்ட நம்பிக்கை காரணமாக இப்போது அனைவரும் அவரை மதிப்பிடும்போது உருவத்தை கவனத்தில் கொள்ளாமல் அவரது திறமையின் அடிப்படையில் முக்கியத்துவம் அளிக்க முன்வந்துள்ளனர்.

அமெரிக்க நாட்டில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்த ஒரு ஏழைச் சிறுவனைப் பார்த்து அவளது ஆசிரியர் பிற்காலத்தில் என்ன செய்யப்போகிறாய்? என்று கேட்டார். உடனே அந்த ஏழைச் சிறுவன் இரவு பகலாக பல மணி ‘?விu முயற்சி செய்து ஒரு வரைபடத்தை தயாரித்தான். அந்த வரைப்படத்தில் இருநூறு ஏக்கர் நிலத்தை குறிப்பிட்டு அதில் குதிரை லாயம், நீச்சல் குளம், 4,000 சதுர அடிக்கு மாளிகை என்ற அளவில் திட்டமிட்டு வரைபடத்தை தயாரித்து ஆசிரியரிடம் கொடுத்தான்.

ஆசிரியர் அதைப் பார்த்து விட்டு குறைந்த மதிப்பெண் அளித்து தன்னை நேரில் வந்து சந்திக்குமாறு குறிப்பு எழுதி இருந்தார். சிறுவன் மிகவும் வருத்தத்துடன் ஆசிரியரை சந்தித்தான். ‘நீ யதார்த்தமாக யோசிக்காமல் அதீத கற்பனையில் பிற்காலத்தில் இருநூறு ஏக்கருக்கும், மாளிகைக்கும் சொந்தக்காரர் ஆவதாக குறிப்பிட்டிருந்தது ஏற்பதற்கில்லை’ என்று ஆசிரியர் கூறினார். பிற்காலத்தில் அதிக எதிர்பார்ப்புடன் செயல்பட்டு, விரக்தி அடைந்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை உணர்வுடன்தான் அறிவுரை வழங்கியதாக அவர் கூறினார்.

இதைக் கேட்டும் மனம் தளராத அந்த சிறுவன், தன் கனவுத் திட்டத்தை உண்மை ஆக்கிவிடலாம் என்று முழுமையாக நம்பி முயன்றான். அவன்தான் நாலாயிரம் சதுர அடியில் மாளிகை உருவாக்கி பெருமை பெற்ற மார்ட்டி ராபர்ட். பின்னாளில் அவனிடம் மன்னிப்புக் கேட்டார் ஆசிரியர்.

ஒருமுறை தத்துவஞானி சோக்ரடீஸ், பொருட்கள் விற்கும் சந்தையில் விற்பனைக்கு தயாராக இருந்த பொருட்களின் விலையையும் பயன்பாட்டையும் அறிய முயன்றார். அப்போது ஒருவர் அவரைப் பார்த்து ‘ஏன் தத்துவஞானியாக இருந்துகொண்டு பொருட்களின் மேல் நாட்டம் கொண்டவராக உள்Zர்கள்?’ என்று கேட்டார். ‘இங்குள்ள பொருட்களின் பயன்பாட்டை அறியும்போதுதான் இங்குள்ள அநேக பொருட்களின் தேவை யின்றி என்னால் வாழ்வை எதிர்கொள்ள முடியும் என்பதை நன்கு உணர முடிகின்றது’ என்றார் சோக்ரடில்.

‘உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்’ என்ற பாட்டிற்கேற்ப ஒவ்வொருவரும் வாழ்வை வெற்றிகரமாக எதிர்கொள்ள தேவையான திறன், ஆற்றல், மனோபாவம், ஆர்வம், விடாமுயற்சி ஆகிய அனைத்தும் அவரவருக்குள்தான் உள்ளது. அவற்றை உணர்ந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
Download As PDF

No comments:

Popular Posts