Ads

exclusivemails.net

Sunday, February 21, 2010

துணிச்சலான முடிவை ஐக்கியப்பட்டு தமிழர்கள் எடுக்க வேண்டிய தேர்தல்தலைவிதியை நிர்ணயிக்கும் கட்டம் எனப் புத்திஜீவிகள் கருத்து


[தொழில்சார் நிபுணர்கள், கல்விமான்கள் மற்றும் சமூக நலனில் அக்கறை யுள்ள வர்த்தகத்துறை முக்கியஸ்தர்கள் போன்றோர் ஒருமித் துக் கருத்து வெளியிட்டிருக்கின்றனர்.]

லங்கையில் தமிழ்ப்பேசும் சமூகத்தின் இருப்பையும் எதிர்காலத்தையும், தலை விதியையும் தீர்மானிக்கும் முக்கிய பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக் கல் செய்வது இன்று தொடங்குகின்றது. இத் தேர்தலில் தமிழ்ப் பேசும் சமூகம் ஐக்கியப் பட்டு துணிச்சலாக எடுக்கும் முடிவிலேயே தீர்மானத்திலேயே அதன் எதிர்காலமே தங்கியிருக்கின்றது எனத் தமிழ்ப் புத்திஜீவிகள், தொழில்சார் நிபுணர்கள், கல்விமான்கள் மற்றும் சமூக நலனில் அக்கறை யுள்ள வர்த்தகத்துறை முக்கியஸ்தர்கள் போன்றோர் ஒருமித் துக் கருத்து வெளியிட்டிருக்கின்றனர்.

மூன்று தசாப்த உள்நாட்டு யுத்தத்தின் பேரழிவுகளிலிருந்தும், மீளமுடியாமல் தவிக்கும் தடு மாறும் தமிழ்ப்பேசும் சமூகத்தின் மீது கடந்த மாதத்திய ஜனாதிபதித் தேர்தலையடுத்து இப்போது பொதுத்தேர்தல் ஒன்றும் வல் வந்தமாகத் திணிக் கப்பட்டிருக்கின்றது.
கட்டுறுதியான அரசியல் கட்டமைப்பு ஒன்றையோ வலுவான அரசியல் தலை மைத்துவத்தையோ கொண்டிராத தமிழி னத்தின் எதிர்காலம், இத் தேர்தல்களில் அவர்கள் வெளிப்படுத்தும் பிரதிபலிப்பை அணுகுமுறையை பொறுத்தே அமை யப் போகின்றது என்பதை தமிழினத்தில் அக்கறை கொண்ட சமூகத் தலைவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
தமிழ் மக்கள் கடந்த ஆறு தசாப்தங் களாக முதல் மூன்று தசாப்தங்களில் அமைதி வழியிலும், அடுத்த மூன்று தசாப் தங்கள் அமைதி மற்றும் ஆயுத வழிகளி லும் முன்னெடுத்த பல்வேறு போராட்டங் களும் பயன்தராமல் போயுள்ள இந்தச் சம யத்தில் போரினால் நலிவுற்று, அவலப் பட்டு, நொந்துபோயிருக்கும் தமிழ் மக்கள் தமது அடுத்த அரசியல் நகர்வு குறித் துத் திண்ணியமாகச் சிந்தித்துத் துணிவுடன் முடி வெடுத்து, ஐக்கியமாக அதனை வெளிப் படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்.
தமிழினத்துக்கும் பெரும் சவால்
போரின் முடிவுக்குப் பின்னர் இலங் கைத் தமிழர்கள் தமது நீதி, நியாயமான அரசியல் அபிலாஷைகளை உறுதிப்பாட் டுடன் முன்னெடுக்கத்தக்க வலிமை மிகுந்த அரசியல் தலைமைத்துவம் அற்ற வர்களாக இருக்கின்றார்கள் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை.
இந்நிலைமை ஒட்டுமொத்தமான தமி ழினத்துக்கும் பெரும் சவாலாகும். இத் தேர்தலை சரியாகத் தமிழர்கள் எதிர்கொள் வதன் மூலமாக மட்டுமே இச்சவாலை வெற்றிகொள்ள முடியும்.
போர் முடிவுக்கு வந்துள்ள போதிலும், தமிழ்மக்களின் பிரச்சினைகள் முடிவுக்கு வரவில்லை. அவர்களின் நியாயபூர்வ மான அரசியல் அபிலாஷைகள் எட்டப்படு வதற்கான சாத்தியங்கள் தென்படவில்லை.
அரசைப் பொறுத்தவரை தமிழர்களின் நியாயமான எதிர்பார்ப்பைத் திருப்தி செய்யும் தீர்வை வழங்கும் எண்ணமே அதற்கு இல்லை என்பதும் வெளிப்படை யானது. அதேசமயம், தனக்கு உகந்த உப்புச்சப்பற்ற ஒரு திட்டத்தைத் தீர்வு என்ற பெயரில் தமிழர்கள் மீது கட்டிவிடும் சூத்தி ரத்துடனேயே அது செயற்படத் தொடங் கியுள்ளது என்பதும் வெளியானது.
அரசியல் துணிச்சலுடன்
குரல் எழுப்பும் தலைமை வேண்டும்
இச்சூழலில் இன்றைய சூழலுக்குத் தேவையான அரசியல் துணிச்சலுடன் தமி ழர்களுக்காகக் குரல் எழுப்பும் அரசியல் தலைமை ஒன்று இந்தத் தேர்தல் மூலம் வெளிப்பட்டால் மட்டுமே தமிழர்களுக்கு ஏதேனும் கொஞ்சநஞ்ச மீட்சி கிடைக்கும் என்பது தெளிவு.
அரசியல் தீர்வொன்றின் அவசியத்தை அரசு புரிந்து கொள்வதற்கு வலியுறுத்தக்கூடிய வலுவான அரசியல் சக்திகள் இன்று தமிழ் மக்கள் மத்தியில் இல்லை.
அதன் காரணத்தினால்தான் சகல விட யங்களிலுமே அரசுடன் இணைந்து செயற் பட வேண்டுமென்று கூறுபவர்கள், புதி தாகத் தோன்றியிருக்கும் அரசியல் சூழ் நிலைக்கேற்றவாறு அரசியல் விசுவாசத் துடன் செயற்பட முயற்சிப்பவர்களாகத் தங்களைத் தாங்களே வர்ணித்துக் கொள் கிறார்கள். தமிழ் மக்களின் நலன்களை நீண்டகால அடிப்படையில் நோக்குகை யில் அவர்களின் இந்த நிலைப்பாடு விவேக மானதாக இல்லை. எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டு மென்று தீர்மானிப்பதற்கு முன்னதாக இன்று இருக்கக்கூடிய சகல தமிழ் அரசி யல் கட்சிகளும் பழைய குரோதங்களை மறந்து ஒன்றிணைய வேண்டுமென்று விடுக்கப்பட்ட கோரிக்கைகளும் பயனற் றுப் போய்விட்டன.
வரலாற்றுக் கடமையை
நிறைவேற்ற வேண்டியவர்கள்
தங்களுக்கான கட்டுறுதியான அர சியல் சமுதாயமொன்றை மீண்டும் உரு வாக்குவதற்கான வாய்ப்பாக எதிர்வரும் பொதுத் தேர்தலைத் தமிழ் மக்கள் பயன்படுத்தியேயாகவேண்டும். அரசியல் ரீதியாகத் தமிழ் மக்கள் தங்களை முனைப் புறுத்துவதற்கு உறுதியான நாடாளுமன்ற அரசியல் பிரதிநிதித்துவத்தைக் கொண்டி ருப்பதைத் தவிர, தமிழ் மக்களுக்குத் தற் போது வேறு மார்க்கமில்லை. ஏனைய சகல மார்க்கங்களும் அடைபட்டுப் போயி ருக்கும் நிலையில் இதுவே ஒரே வழி.
அதனால் அடுத்த நாடாளுமன்றத்தில் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவ தற்கு தமிழ் மக்களினால் தெரிவு செய்யப் படக்கூடிய பிரதிநிதிகள் வரலாற்றுக் கடமையொன்றை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கப் போகிறார்கள்.
அந்தப் பொறுப்பை நிறைவேற்றக் கூடிய அரசியல் துணிச்சலும், நேர்மை யும், கொள்கை உறுதிப்பாடும் விலை போகாத குணாதிசயமும் கொண்ட கற்ற றிந்த வேட்பாளர்களைக் களத்தில் நிறுத் தும் அணியினரைத் தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும்.
இலங்கைத் தமிழ் மக்களின் எதிர்கால இருப்பை உறுதி செய்வதற்கான புதிய அர சியல் பாதையை வகுப்பதற்கான முதற் படியாக எதிர்வரும் நாடாளுமன்றத் தேர் தலை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்து வதென்பதே தமிழ் மக்கள் எதிர்நோக்கும் உடனடிச் சவாலாகும்.
இவ்வாறு புத்திஜீவிகள் அடங்கிய தமிழர் நலன்காக்கும் சமூகப் பிரதிநிதிகள் தமிழ் ஊடகங்கள் வாயிலாகத் தமிழ் மக்க ளுக்குச் செய்தி ஒன்றை வெளியிட்டிருக் கின்றார்கள். Download As PDF

No comments:

Popular Posts