மணிரத்னம் படத்தில் சிம்பு நடிக்கிறார். இப்படி நெட்டுகளிலும், வார இதழ்களிலும் செய்தி றெக்கை கட்டி பறந்தது கடந்த சில வாரங்களாக! (நமது இணைய தளத்தில் அல்ல) ஆனால் உண்மையில் நடந்தது என்ன? ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை! ராவணா படத்தில் நடிக்கும் அபிஷேக் பச்சனுக்கு குரல் கொடுக்க சரியான ஆளை தேடிக் கொண்டிருந்தார் மணிரத்னம். சட்டென்று சிம்பு நினைவுக்கு வர, நேரில் வாங்க. பேசணும் என்றாராம். அதன்பின் இருவரின் சந்திப்பு நடந்தது. அதற்குள் இருவரும் சேர்ந்து படம் பண்ண போகிறார்கள் என்ற தகவல் காட்டு தீயாக பரவி விட்டது. குரல் தேர்வுக்கு பின் சிம்புவின் குரலே அபிஷேக்குக்கு பொருத்தமானது என்ற முடிவுக்கு வந்த மணிரத்னம். அவரையே பேச வைத்து விட்டாராம். வேடிக்கை என்னவென்றால் இந்த டிராக்கை முதலில் பேசியிருந்தவரும் ஒரு பிரபல நடிகர்தான். அவரது குரலை விட சிம்புவின் குரல் இன்னும் பொருத்தமாக இருக்கிறதாம். இதற்கிடையில் சிம்புவும், கவுதம் மேனனும் உடனடியாக இணைந்து இன்னொரு படத்தை தருகிற மூடில் இருக்கிறார்கள். பேச்சு வார்த்தை துவங்கியிருக்கிறது. முடிவு காயா? பழமா? என்பது இன்னும் இரண்டொரு நாட்களில் தெரியும். |
Friday, March 19, 2010
மணிரத்னம் படத்தில் சிம்புவா? உலவிக்கொண்டிருக்கும் உடான்ஸ்...
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
இருபதாம் நூற்றாண்டு துவங்கும் முன்பே திரைப்படம் தமிழ்நாட்டில் தோன்றி விட்டது. 1895இல் லூமியே சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சலனப்படம், இரண்...
-
கே ரளத்திலிருந்து கிளம்பி வந்தார் அந்த நடிகை. சேட்டன் பூமியில் சில்மிஷ படங்களில் நடித்திருந்தார். இதனாலேயே அவரின் கவர்ச்சியைப் பார்த்த பிற...
-
T he young band “Chimes of the 70s” completed a successful year in the music scene in January and the leader 18-year-old Rukshan Karu...
-
பாரதியின் தேசிய கீதங்கள் பாடலில் பாரததேசம் பாடல் பகுதியில், ‘வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம் அடிமேலைக் கடல் முழுதுங் கப்பல் விடுவோம்...’ ...
-
I nspired by the tremendous following of live concerts held in Sri Lanka and the overwhelming talent in the country a newly formed product...
-
த மிழ் மொழி தொன்மை யான செம்மொழி என்பதை ஆய்வுலகும் அறிஞர் உலகும் ஏற்றுக்கொண்டு ள்ளன. அம்மொழியின் வளங்கள் பன்முகம் கொண்டவை. சங்க நூல்கள் இல...
No comments:
Post a Comment