Ads

exclusivemails.net

Thursday, April 22, 2010

அன்பா பழகுனாலும் அம்பா பாயுறாங்களே...? -நடிகையின் நான் ஸ்டாப் அழுகை


கிசுகிசு கிங்கரர்கள் பிடியில் மறுபடியும் ஒரு மான் குட்டி. நேற்றெல்லாம் ஒரே அழுகை என்கிறார்கள் நடிகைக்கு நெருக்கமானவர்கள். தமிழ்ல பேசுற நடிகைகளை பார்க்கறதே அத்தி பூத்தார் போல அபூர்வம். இதுல அவங்க இமேஜ்ல சுத்தியால அடிச்ச மாதிரி சுள்ளுன்னு வந்திருக்கே இந்த செய்தி என்று மொழிவாரி தோழர்களும் உச் கொட்டுகிறார்கள் நடிகைக்கு ஆதரவாக. அப்படியென்ன செய்தி அது.
வேறொன்றுமில்லை. நடிகை வாந்தி எடுத்துவிட்டாராம். அதற்கு காரணம் யாரு என்று அவருக்கே தெரியவில்லையாம். ஊரு பேரில் படம் எடுக்கிற அந்த பிரண்ட்ஸ் வட்டாரத்துக்கு போன் பண்ணி யாருப்பா என் வாந்திக்கு காரணம் என்றாராம். இதுதான் அந்த கிசுகிசு. குடும்ப பாங்கான நடிகை என்று ஒருவார்த்தை எழுதி நடிகை யாருன்னு பளிச்சுன்னு புரியுற மாதிரியும் சொல்லிவிட்டதுதான் இந்த அழுகைக்கு காரணம்.
நான் எல்லாரிடமும் நல்லாதான் பழகுறேன். எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று அவர் அழுததை இப்போ நினைச்சாலும் மனசெல்லாம் பதறுது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். அன்பா பழகுனாலும், அம்பா பாயுற கிசுகிசுவை அவ்வளவு சீரியஸா எடுத்துக்கணுமா என்ன?
Download As PDF

No comments:

Popular Posts